Thursday, October 17, 2013

haique

சேப்பாக்கத்தில் 
பகல் இரவு ஆட்டம் 
காடாவிளக்கில்  வீட்டுப்பாடம்.


தென்னதோப்பு 
நடுவே 
ஒழுகும் குடிசை 


நெருங்கும் பண்டிகை 
பயத்தில் தாத்தா 
ரேசனில் கூடுதல் சர்க்கரை.



புயல் சேதம் 
மரங்கள் கணக்கெடுப்பு 
கூடுகள்?


சங்கடத்தில் 
பால்காரி 
பசிக்கழும் குழந்தை.



தேனீர் குவளையில் 
அலைகள் 
சூடாறிய தேனீர்.


திறந்து கிடக்கும் 
மண்பானையில் நீர் 
மூடியாக நிலா.


Friday, September 27, 2013

ஹைக்கூ ...


ஹைக்கூ...


நீரின்றி  வேர் 
தொட்டி நீரில் 
சருகுகள்...



காயும் வத்தல் 
காய்கிறாள் 
வேலைகாரப் பெண்...



கழுவியபோது 
நழுவிய விதைகள் 
தக்காளி, கத்தரி...



நிறுத்திய வாகனம்
  நிழலில் பயணம் 
எறும்புகள் ...


உலர்ந்த ஆடை
சேகரிக்கப்பட்டது 
வெயிலில்  பூ ...

உயிரும், மெய்யும் 
கரைகிறது 
சாக்பீஸ்...


  


உறுத்தல்...

உறுத்தல்...



சுவரில் அடிச்ச 
 கொசு-
பார்க்கநேரும்போது 
மனதை உறுத்துகிறது 
வெள்ளையடிக்கும் வரை 
கரும்புள்ளியாய் 
உட்கார்ந்திருக்கிறது 
மனசுக்குள்...






ஞாபகத்தில் நீ...





ஞாபகத்தில் நீ...



ஒவ்வொரு 
மாற்று இரவிலும் 
நினைவில் வந்துபோகிறாய் 
அப்பா-
இணைந்து இருக்கும் 
கொசுவர்த்திச்  சுருளை 
உடையாமல் 
பிரித்ததில்லை நீ...

ஹைக்கு

எறும்பின் பிடியில் 
நிலா வெளிச்சம் 
அவளது நகத்துண்டு...



கங்கை 
யமுனை                                                                  
கள்ளிச் செடி...



பசியில் குழந்தை 
விளம்பரத்தில் 
பிஸ்கட்...



மதில்சுவரில் பதித்த 
கண்ணாடித்துண்டுகள் 
அமர்ந்த பட்டாம்பூச்சி...



மாடியில் 
முறுக்கு, சிப்ஸ் 
குடிசை தொழில்...

ஹைக்கு ...


அத்தனை அழுக்கையும் 
சுத்தம் செய்தது 
வேஸ்ட் துணி...




தொலைவில் மணியோசை 
உருகியபடி மகள் 
ஐஸ் ...



பழுதான தொலைபேசி 
நலம்விசாரிக்கும் மகள் 
பக்கத்தில் நான்...



உழும்போதே 
கிடைத்த உணவு
இறைகொத்தும் பறவைகள் ...



திறந்தபோது 
வெளியேறிய அரணா
கொளுத்தும் வெயில்...





இடதில் நிழல் 
வலதில்  வெயில் 
நடுவில் நான்...

நானும் ... மாவும் ...

நானும் ... மாவும் 



முடிந்தது கவியரங்கம் 
உங்கள் கவிதை 
மிக அற்புதம் 
நல்ல சிந்தனை 
கவிஞர்களின்  நட்பிலிருந்து 
விடைபெற்றேன் 


மாத இதழ் ஆசிரியர் 
கவிஞ்சரே-
வாசித்த கவிதையை 
இந்த மாத இதழில் 
வெளியிடுகிறேன்
 சம்மதம்தானே 
புன்னகையுடன் நன்றி ஐயா 


புறப்படும்முன் 
சில புத்தகங்களையும் 
வாங்கினேன் 


வழி நெடுங்கிலும் 
நிகழ்ச்சியின் நினைவுகள் 


வீடுவந்து சேர்ந்தேன் 
மகளிடம் காண்பித்தேன் 
பொன்னாடைகளையும் 
பரிசுகளையும் 


குறுக்கே புகுந்த 
மனைவி கேட்டால் 
வரும்வழியில்
மாவுவாங்க சொன்னேனே 
எங்கே மாவு?

            **********


 துரை நந்தகுமார் .