Friday, September 27, 2013

நானும் ... மாவும் ...

நானும் ... மாவும் 



முடிந்தது கவியரங்கம் 
உங்கள் கவிதை 
மிக அற்புதம் 
நல்ல சிந்தனை 
கவிஞர்களின்  நட்பிலிருந்து 
விடைபெற்றேன் 


மாத இதழ் ஆசிரியர் 
கவிஞ்சரே-
வாசித்த கவிதையை 
இந்த மாத இதழில் 
வெளியிடுகிறேன்
 சம்மதம்தானே 
புன்னகையுடன் நன்றி ஐயா 


புறப்படும்முன் 
சில புத்தகங்களையும் 
வாங்கினேன் 


வழி நெடுங்கிலும் 
நிகழ்ச்சியின் நினைவுகள் 


வீடுவந்து சேர்ந்தேன் 
மகளிடம் காண்பித்தேன் 
பொன்னாடைகளையும் 
பரிசுகளையும் 


குறுக்கே புகுந்த 
மனைவி கேட்டால் 
வரும்வழியில்
மாவுவாங்க சொன்னேனே 
எங்கே மாவு?

            **********


 துரை நந்தகுமார் .




 

No comments:

Post a Comment