Saturday, August 31, 2013

கடவுள்


நீண்டநேரம் யோசித்து 
தூங்கிப்போனேன் 
கனவில் கடவுள்...

கடவுள் யார் 
பதில்சொன்னார் 
கடவுள் 

மரம் வெட்டாதவன் 
கடவுள் 
மரம் நடுபவன்
கடவுளின் கடவுள் 

மணல் கடத்தாதவன் 
நெகிழி தவிர்ப்பவன் 
புவி வெப்பம் தடுப்பவன் 

கல்வி கற்று 
கற்று தருபவன் 

சாதி மறந்தவன் 

உடலுறுப்பு தானம் செய்பவன் 
கடவுள் 

குழந்தை பிறந்ததும்
ஆனா? பெண்ணா? கேட்காமல் 
தாய்...சேய் 
நலமா என்பவன் 

மூன்று வயது சிறுமிக்கு 
மாடியில் அழைத்து  
மிட்டாய்  தராதவன் 
கடவுள் 

வரதட்சனை மறுப்பவன் 
விதவை ஏற்பவன்

சிலைக்கு பதில் 
வற்றிய வயிற்றுக்கு 
பால் வார்ப்பவன் 

மனித நேயத்தை மதிப்பவன் 
முக்கியமாய்-
கருவறையிலிருந்து 
என்னை கடத்தாதவன் 
இவர்களே கடவுள் 

கனவிலிருந்த கடவுள் 
கலைந்து  சென்றார்.

No comments:

Post a Comment