Saturday, August 31, 2013

உண்மைகள்

வேருக்கு மட்டுமா 

கிளைக்கும் நீர் 

குளத்தில் மரநிழல்...




மனிதனுடன் மரமும் 

மரணம் 

சவப்பெட்டி...



மிதித் துணியில்  அமர்ந்தது 

வண்ணத்துப் பூச்சி 

மிதித்துணியில்  பூ...



ஒருசாண் வயிறு 

நீண்ட வரிசை 

ரேசன் கடை...



மாநில நாக்குகள் 

பலமுறை பேசியும் 

வராத காவிரி...


குடியிருப்பில் 

வரபோகும் அடுக்ககம் 

கூண்டோடு  கூடு...



மீதமிருக்கும் பால் 

மடியில் 

கசாப்கடையில் ஆடு...

No comments:

Post a Comment